ஒண்ணுமில்ல சும்மாக்காட்டியும்



நினைவுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நினைவுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 27 ஆகஸ்ட், 2009

அன்புள்ள அப்பா,

அன்புள்ள அப்பாவுக்கு,

எப்பிடிப்பா இருக்கீங்க. எனக்கு நெனவு தெரிஞ்சு, நான் உனக்கு எழுதற ரெண்டாவது லெட்டர்னு நெனக்கரன்ப்பா.

இன்னமும் எனக்கு நல்லா ஞாபகம் இருக்குப்பா. அந்த லட்டர படிச்சுட்டு நீ ரெண்டு, மூணு நாளு தூங்காம இருந்தது. நம்ம ரெண்டு பேரோட வாழ்க்கையையும் அந்த லட்டருக்கு முன்/பின் பிரிச்சிக்கலாம்னு எனக்கு அடிக்கடி தோணும்.

ஆயா அடிக்கடி சொல்லுவாங்க, காலம் எல்லாத்துக்கும் பதில் சொல்லும்னு. அது அப்போ எனக்கு புரியல. என்னோட கல்யாணத்துக்கு அப்புறம், என்னால நெறைய விஷயம் புரிஞ்சிக்க முடியுது.

உன்னோட செயலுக்கெல்லாம் குறைஞ்ச பட்ச நியாயம் உன்னளவில இருந்திருக்கும்னு என்னால புரிஞ்சிக்க முடியுதுப்பா.

ஆனாலும் எங்களை அக்கா கல்யாணம் வரைக்கும், உன்கூட வச்சிக்க முடியாததக்கு ஒரு நல்ல காரணம் இப்பவும் உன்னால சொல்ல முடியுமாப்பா.

நானும் அண்ணனும் ஸ்கூலுக்கு போகும்போது ,எவ்வளோ தவிச்சிருக்கோம்னு, எவ்ளோ சொன்னாலும் உன்னால புரிஞ்சிக்க முடியாதுப்பா.

இப்பவும் என் சர்டிபிகேட்லயும் அண்ணன் சர்டிபிகேட்லயும் தாத்தாவோட கைஎழுத்துதானப்பா இருக்கு.

எங்களால புரிஞ்சிக்க முடியாத விஷயம் ஒண்ணு இருக்குப்பா. அதுக்குதான் இந்த லட்டர்.

ஆரம்பத்துல நீ ஆயா மேல ரொம்ப பாசமா இருந்தன்னு, பக்கத்து வீட்டு பெருசுங்ககிட்ட பேசிக்கிட்டு இருக்கும்போதுலாம் கேள்விப்பட்டு இருக்கன்.

ஆயா சாகும்போது நீ அதையெல்லாம் வெளிக்காட்டி நாங்க யாரும் பார்க்கவே இல்லப்பா. இன்னும் கொஞ்ச நாள்ல உன்னோட பேத்திக்கு கல்யாணம் ஆகப்போதுப்பா. இன்னமுமா நீ ..... நெனச்சி யோசிச்சிக்கிட்டு இருக்க.

எங்க எல்லாருக்கும் அடி மனச அரிச்சிக்கிட்டிருக்கிற ஒரு விஷயம், தாத்தா.

நெனச்சா கண்ணு கலங்குதுப்பா.

வேற வழியில்ல, எங்களோட வேலைக்காக/வாழ்வாதாரத்துக்காக நம்ம ஊரிலேயே இருக்க முடியல.
தாத்தாவை கூட வச்சிக்கணும்னு ஆசைப்பட்டாலும் சூழ்நிலை இடம் தரல.

ஆனா எது எப்பிடி இருந்தாலும், தாத்தா ஊருல இருக்குற முறை எங்க யாருக்குமே சந்தோசத்தை தரலங்கிரதுதான் உண்மைப்பா.

இன்னும் கொஞ்ச நாள்ல நீயும் ரிடேர்மேன்ட் வாங்கிகினு வீட்லதான் இருக்கப்போற.
அப்போவாவது தாத்தாவை கொஞ்சம் நல்லா பாத்துக்கப்பா.

என்றென்றும் அன்புடன்,

............

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2009

உன்னை விட்டு நெடுந்தொலைவு.....



உன்னை விட்டு நெடுந்தொலைவு
உள்ளுக்குள்ளே உன் நினைவு
நள்ளிரவு விழித்திருப்பேன்
நட்சத்திரம் பார்த்திருப்பேன்
நீ சிரிக்கும் நொடியில் எந்தன்
நெஞ்சினிலே பூ மலரும்
விட்டு வரும் வேலையல்ல
கடமை இது! கண்ணே!
முடித்து விட்டு திரும்பும் வரை
முத்தங்களை வைத்திரு நீ!
---------------------------------------------------------
இது கார்கில் போர் நடந்த சமயம் ஆனந்த விகடன் பத்திரிகையில் வந்த ஒரு கவிதை.

என் மகனை பிரிந்திருக்கும் இந்த ஒரு வாரத்தில் என் நினைவில் நித்தமும் நிழலாடும் கவிதை இது.

இதன் முழு கவிதை வரிகளும் என் நினைவில் இல்லை. தெரிந்தவர்கள் யாரேனும் சொல்ல இயலுமா?

வியாழன், 20 ஆகஸ்ட், 2009

2007-April-29-டைரியின் ஒரு பக்கம்-பாகம் 2

முதல் பாகம்!
---------------------------------------------------------------------------------------------------------------------------

"தப்பா நினைக்காதீங்க, பையன் உங்க பொண்ணு கூட ஒரு பத்து நிமிஷம் பேசனும்னு சொல்றான். உங்களுக்கு யாருக்கும் எதுவும் ஆட்சேபனை இல்லன்னா?" 

'கொஞ்சம் இருங்க வந்திடுறேன்,"  

(இன்னா இந்த வாத்தி உள்ள போன ஆள காணும், பேசனும்னுதான சொன்னன்)  

'இங்க வாங்க தம்பி, உட்காருங்க,'  


(இங்கயா, டே லூசாடா நீங்கள்லாம். அஞ்சடி தள்ளி சேர் போட்டு பேசினா அதுக்கு பேர் தனியா பேசறதுன்னு அர்த்தமா?)  


"கொஞ்சம் நிமிர்ந்து பாருங்க" 


'யே ஹேமா, நிமிந்து பார்த்து பேசுடி,' 


(இது யார்ரா, பொண்ண விட நல்லா ஒரு பிகரு)  


"உங்களுக்கு என்னங்க பிடிக்காது?"

(என்ன இவரு எடுத்தவுடனே பிடிக்காத விஷயத்த பத்தி கேக்கறாரு)
"பொய் சொன்னா பிடிக்காது!"


(தொழில் சுத்தம், நமக்கு சோறு போடறதே அதானே)
"அப்புறம்?"  


"என்கிட்டே கோவமா பேசினா பிடிக்காது!" 


"ம்"  


"நான் உங்ககிட்ட ஒண்ணு கேக்கலாமா?"  


??
------------------------------------------------


மீண்டும் சந்திப்போம்!!

சனி, 18 ஏப்ரல், 2009

2007-April-29-டைரியின் ஒரு பக்கம்

2007-April-29-
------------------------------------------------------------------------------------------------------

இன்று ஏனோ காலை கண் விழித்ததிலிருந்தே என் வசம் நான் இல்லை. என் செயல்கள் அனைத்தும் உணர்ச்சியின் வசத்திலே நடந்து கொண்டிருக்கிறது. என் அப்பாவும் வழக்கம்போல் இல்லை. ஏழு மணிக்கு கிளம்பவேண்டும்.

நேற்று புதியதாய் எடுத்து வந்திருந்த ப்ளூ டெனிம் ஜீன்சும், ராம்ராஜ் வெள்ளை காட்டன் சட்டையும் அணிந்து புறப்பட தயாரானேன்.

என் அப்பா சொன்னார் "ஏழு இருபதுக்கு புறப்பட்டா போதும்பா, நீ வண்டி எடுத்துட்டு வந்துடு, நாங்க எல்லாம் பஸ்ல வந்துடுறோம்."

இருபது கிலோ மீட்டர் போகணும் . ஏழு இருபதுக்கு கிளம்பினா எட்டு மணிக்குள்ள போய்டலாம். கொஞ்சம் படபடப்பா இருக்குது. ஒரு தம் போடணும் போல இருக்கு. யோசனையாவும் இருக்கு. "கிட்ட வரும்போது வாசனை அடிக்குமோ".

"ஒரு கிங்க்ஸ் ஒரு பூமர் குடுங்க", இந்த செல்போன் வேற நேரங்கெட்ட நேரத்துல அடிச்சுக்கிட்டு , "அப்பா, சொல்லுங்கப்பா, வழியில இருக்கேன்ப்பா, இன்னும் இருபது நிமிஷத்துல வந்திடுவேன்,"

"ஏங்க, இங்க வாத்தியார் பூவராகவன் வீடு எங்கிங்க இருக்கு", அந்த வீடா இருக்குமோ? நம்ம ஆளுங்க யாரையும் காணுமே? எல்லாம் ஒரு மாதிரி பாக்குறானுங்க.

"டேய் தம்பி, இந்த வீடுதான் வா , இவருதான் பூவராகவன் "," வணக்கங்க"

ஏன்டா டேய், உங்களுக்கெல்லாம் வேற வேலையே இல்லையா?

"தம்பி என்ன புது பேன்ட் புது சட்டை, இப்பதான் எடுத்து போட்டுட்டு வர மாதிரி இருக்கு",

"இல்லக்கா, எடுத்து ஒரு வாரம் ஆச்சி, இப்பதான் போடுறேன்",

" தம்பி என்ன வேலை செய்யறீங்க", "ஒரு கம்ப்யூட்டர் கம்பனியில சேல்ஸ் மேனேஜரா இருக்கேங்க(நீ தெரிஞ்சிகிட்டு என்னடா பண்ணபோற)"

எதுக்கு வந்திருக்கமோ அத தவிர எல்லாம் நடக்குது.

"சரி சரி பொண்ண கூட்டிட்டு வாங்கப்பா" இவ்ளோ நேரம் எங்கடாப்பா போயிருந்த ?

"தம்பி, காபி எடுத்துக்கோங்க ","பாப்பா, இப்பிடி உக்காரம்மா",

"ப்பா, கொஞ்சம் வெளில வாங்கப்பா", "என்ன தம்பி ",

"ப்பா, பொண்ணு கூட ஒரு பத்து நிமிஷம் தனியா பேசணும்",

"இருப்பா, பொண்ணோட அப்பாகிட்ட கேக்கறேன்",


அப்புறம என்ன நடந்தது , நாளைக்கு சொல்றேன் என்ன?