அன்புள்ள அப்பாவுக்கு,
எப்பிடிப்பா இருக்கீங்க. எனக்கு நெனவு தெரிஞ்சு, நான் உனக்கு எழுதற ரெண்டாவது லெட்டர்னு நெனக்கரன்ப்பா.
இன்னமும் எனக்கு நல்லா ஞாபகம் இருக்குப்பா. அந்த லட்டர படிச்சுட்டு நீ ரெண்டு, மூணு நாளு தூங்காம இருந்தது. நம்ம ரெண்டு பேரோட வாழ்க்கையையும் அந்த லட்டருக்கு முன்/பின் பிரிச்சிக்கலாம்னு எனக்கு அடிக்கடி தோணும்.
ஆயா அடிக்கடி சொல்லுவாங்க, காலம் எல்லாத்துக்கும் பதில் சொல்லும்னு. அது அப்போ எனக்கு புரியல. என்னோட கல்யாணத்துக்கு அப்புறம், என்னால நெறைய விஷயம் புரிஞ்சிக்க முடியுது.
உன்னோட செயலுக்கெல்லாம் குறைஞ்ச பட்ச நியாயம் உன்னளவில இருந்திருக்கும்னு என்னால புரிஞ்சிக்க முடியுதுப்பா.
ஆனாலும் எங்களை அக்கா கல்யாணம் வரைக்கும், உன்கூட வச்சிக்க முடியாததக்கு ஒரு நல்ல காரணம் இப்பவும் உன்னால சொல்ல முடியுமாப்பா.
நானும் அண்ணனும் ஸ்கூலுக்கு போகும்போது ,எவ்வளோ தவிச்சிருக்கோம்னு, எவ்ளோ சொன்னாலும் உன்னால புரிஞ்சிக்க முடியாதுப்பா.
இப்பவும் என் சர்டிபிகேட்லயும் அண்ணன் சர்டிபிகேட்லயும் தாத்தாவோட கைஎழுத்துதானப்பா இருக்கு.
எங்களால புரிஞ்சிக்க முடியாத விஷயம் ஒண்ணு இருக்குப்பா. அதுக்குதான் இந்த லட்டர்.
ஆரம்பத்துல நீ ஆயா மேல ரொம்ப பாசமா இருந்தன்னு, பக்கத்து வீட்டு பெருசுங்ககிட்ட பேசிக்கிட்டு இருக்கும்போதுலாம் கேள்விப்பட்டு இருக்கன்.
ஆயா சாகும்போது நீ அதையெல்லாம் வெளிக்காட்டி நாங்க யாரும் பார்க்கவே இல்லப்பா. இன்னும் கொஞ்ச நாள்ல உன்னோட பேத்திக்கு கல்யாணம் ஆகப்போதுப்பா. இன்னமுமா நீ ..... நெனச்சி யோசிச்சிக்கிட்டு இருக்க.
எங்க எல்லாருக்கும் அடி மனச அரிச்சிக்கிட்டிருக்கிற ஒரு விஷயம், தாத்தா.
நெனச்சா கண்ணு கலங்குதுப்பா.
வேற வழியில்ல, எங்களோட வேலைக்காக/வாழ்வாதாரத்துக்காக நம்ம ஊரிலேயே இருக்க முடியல.
தாத்தாவை கூட வச்சிக்கணும்னு ஆசைப்பட்டாலும் சூழ்நிலை இடம் தரல.
ஆனா எது எப்பிடி இருந்தாலும், தாத்தா ஊருல இருக்குற முறை எங்க யாருக்குமே சந்தோசத்தை தரலங்கிரதுதான் உண்மைப்பா.
இன்னும் கொஞ்ச நாள்ல நீயும் ரிடேர்மேன்ட் வாங்கிகினு வீட்லதான் இருக்கப்போற.
அப்போவாவது தாத்தாவை கொஞ்சம் நல்லா பாத்துக்கப்பா.
என்றென்றும் அன்புடன்,
............
எப்பிடிப்பா இருக்கீங்க. எனக்கு நெனவு தெரிஞ்சு, நான் உனக்கு எழுதற ரெண்டாவது லெட்டர்னு நெனக்கரன்ப்பா.
இன்னமும் எனக்கு நல்லா ஞாபகம் இருக்குப்பா. அந்த லட்டர படிச்சுட்டு நீ ரெண்டு, மூணு நாளு தூங்காம இருந்தது. நம்ம ரெண்டு பேரோட வாழ்க்கையையும் அந்த லட்டருக்கு முன்/பின் பிரிச்சிக்கலாம்னு எனக்கு அடிக்கடி தோணும்.
ஆயா அடிக்கடி சொல்லுவாங்க, காலம் எல்லாத்துக்கும் பதில் சொல்லும்னு. அது அப்போ எனக்கு புரியல. என்னோட கல்யாணத்துக்கு அப்புறம், என்னால நெறைய விஷயம் புரிஞ்சிக்க முடியுது.
உன்னோட செயலுக்கெல்லாம் குறைஞ்ச பட்ச நியாயம் உன்னளவில இருந்திருக்கும்னு என்னால புரிஞ்சிக்க முடியுதுப்பா.
ஆனாலும் எங்களை அக்கா கல்யாணம் வரைக்கும், உன்கூட வச்சிக்க முடியாததக்கு ஒரு நல்ல காரணம் இப்பவும் உன்னால சொல்ல முடியுமாப்பா.
நானும் அண்ணனும் ஸ்கூலுக்கு போகும்போது ,எவ்வளோ தவிச்சிருக்கோம்னு, எவ்ளோ சொன்னாலும் உன்னால புரிஞ்சிக்க முடியாதுப்பா.
இப்பவும் என் சர்டிபிகேட்லயும் அண்ணன் சர்டிபிகேட்லயும் தாத்தாவோட கைஎழுத்துதானப்பா இருக்கு.
எங்களால புரிஞ்சிக்க முடியாத விஷயம் ஒண்ணு இருக்குப்பா. அதுக்குதான் இந்த லட்டர்.
ஆரம்பத்துல நீ ஆயா மேல ரொம்ப பாசமா இருந்தன்னு, பக்கத்து வீட்டு பெருசுங்ககிட்ட பேசிக்கிட்டு இருக்கும்போதுலாம் கேள்விப்பட்டு இருக்கன்.
ஆயா சாகும்போது நீ அதையெல்லாம் வெளிக்காட்டி நாங்க யாரும் பார்க்கவே இல்லப்பா. இன்னும் கொஞ்ச நாள்ல உன்னோட பேத்திக்கு கல்யாணம் ஆகப்போதுப்பா. இன்னமுமா நீ ..... நெனச்சி யோசிச்சிக்கிட்டு இருக்க.
எங்க எல்லாருக்கும் அடி மனச அரிச்சிக்கிட்டிருக்கிற ஒரு விஷயம், தாத்தா.
நெனச்சா கண்ணு கலங்குதுப்பா.
வேற வழியில்ல, எங்களோட வேலைக்காக/வாழ்வாதாரத்துக்காக நம்ம ஊரிலேயே இருக்க முடியல.
தாத்தாவை கூட வச்சிக்கணும்னு ஆசைப்பட்டாலும் சூழ்நிலை இடம் தரல.
ஆனா எது எப்பிடி இருந்தாலும், தாத்தா ஊருல இருக்குற முறை எங்க யாருக்குமே சந்தோசத்தை தரலங்கிரதுதான் உண்மைப்பா.
இன்னும் கொஞ்ச நாள்ல நீயும் ரிடேர்மேன்ட் வாங்கிகினு வீட்லதான் இருக்கப்போற.
அப்போவாவது தாத்தாவை கொஞ்சம் நல்லா பாத்துக்கப்பா.
என்றென்றும் அன்புடன்,
............
