ஒண்ணுமில்ல சும்மாக்காட்டியும்



வெள்ளி, 21 ஆகஸ்ட், 2009

உன்னை விட்டு நெடுந்தொலைவு.....



உன்னை விட்டு நெடுந்தொலைவு
உள்ளுக்குள்ளே உன் நினைவு
நள்ளிரவு விழித்திருப்பேன்
நட்சத்திரம் பார்த்திருப்பேன்
நீ சிரிக்கும் நொடியில் எந்தன்
நெஞ்சினிலே பூ மலரும்
விட்டு வரும் வேலையல்ல
கடமை இது! கண்ணே!
முடித்து விட்டு திரும்பும் வரை
முத்தங்களை வைத்திரு நீ!
---------------------------------------------------------
இது கார்கில் போர் நடந்த சமயம் ஆனந்த விகடன் பத்திரிகையில் வந்த ஒரு கவிதை.

என் மகனை பிரிந்திருக்கும் இந்த ஒரு வாரத்தில் என் நினைவில் நித்தமும் நிழலாடும் கவிதை இது.

இதன் முழு கவிதை வரிகளும் என் நினைவில் இல்லை. தெரிந்தவர்கள் யாரேனும் சொல்ல இயலுமா?

1 கருத்து:

சிவக்குமரன் சொன்னது…

ஒருத்தருக்குமா தெரியல? தெரியலனா தெரியலனு சொல்லுங்கப்பா.