ஒண்ணுமில்ல சும்மாக்காட்டியும்



வியாழன், 20 ஆகஸ்ட், 2009

2007-April-29-டைரியின் ஒரு பக்கம்-பாகம் 2

முதல் பாகம்!
---------------------------------------------------------------------------------------------------------------------------

"தப்பா நினைக்காதீங்க, பையன் உங்க பொண்ணு கூட ஒரு பத்து நிமிஷம் பேசனும்னு சொல்றான். உங்களுக்கு யாருக்கும் எதுவும் ஆட்சேபனை இல்லன்னா?" 

'கொஞ்சம் இருங்க வந்திடுறேன்,"  

(இன்னா இந்த வாத்தி உள்ள போன ஆள காணும், பேசனும்னுதான சொன்னன்)  

'இங்க வாங்க தம்பி, உட்காருங்க,'  


(இங்கயா, டே லூசாடா நீங்கள்லாம். அஞ்சடி தள்ளி சேர் போட்டு பேசினா அதுக்கு பேர் தனியா பேசறதுன்னு அர்த்தமா?)  


"கொஞ்சம் நிமிர்ந்து பாருங்க" 


'யே ஹேமா, நிமிந்து பார்த்து பேசுடி,' 


(இது யார்ரா, பொண்ண விட நல்லா ஒரு பிகரு)  


"உங்களுக்கு என்னங்க பிடிக்காது?"

(என்ன இவரு எடுத்தவுடனே பிடிக்காத விஷயத்த பத்தி கேக்கறாரு)
"பொய் சொன்னா பிடிக்காது!"


(தொழில் சுத்தம், நமக்கு சோறு போடறதே அதானே)
"அப்புறம்?"  


"என்கிட்டே கோவமா பேசினா பிடிக்காது!" 


"ம்"  


"நான் உங்ககிட்ட ஒண்ணு கேக்கலாமா?"  


??
------------------------------------------------


மீண்டும் சந்திப்போம்!!

கருத்துகள் இல்லை: