ஒண்ணுமில்ல சும்மாக்காட்டியும்



சனி, 10 ஜூலை, 2010

நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்!!

வெகு நாட்களுக்கு பிறகு, நேற்றைய இரவு  தூக்கமில்லா இரவாகிப்போனது. அரைப் பாக்கெட் வெண்குழல் வத்தியுடன் மொட்டை மாடியேறி நிலவு தேடி கண்கள் வட்டமிட்டது. பிறகுதான் தெரிந்தது  நாளை அமாவாசையென்று.


என் தாத்தா அடிக்கடி சொல்லுவார். எப்போதும் விழிப்புடன் இருந்தால், வாழ்வில் ஒரு கதவு மூடினாலும் மறு கதவு கண்ணுக்கு தெரியுமென்று.

 நேற்றைக்கு ஒரு கதவு மூடும்போலத் தெரிந்தது. அரைமணி நேரம் அதன் ஆழ அகலங்களை யோசித்துக்கொண்டிருந்தேன். அப்போது வந்த ஒரு தொலைபேசி அழைப்பு மறு கதவின் திறவுகோலை என் கண்ணுக்கு காட்டியது.

 வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும், வாசல் தோறும் வேதனை இருக்கும்’ என்ற பாடலின் அர்த்தம் எனக்கு ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு அர்த்தத்தை தரக்கூடியது. இந்த முறை இவ்விதம்.
 

 சில வருடங்களுக்கு முன் படித்த ஒரு தினமணி தலையங்கம் நினைவுக்கு வந்தது.

’ மாற்றம் ஒன்றே மாறாதது’

கருத்துகள் இல்லை: