ஒண்ணுமில்ல சும்மாக்காட்டியும்



ஞாயிறு, 25 ஜனவரி, 2015

பெண்களின் கண்கள் - முதல் தருணம்

முன்/பின் அறிமுகமில்லாத பெண்களின் கண்களை தீண்டும்  முதல் தருணம், இந்த முப்பத்தந்தை கடந்த வயதிலும் மறக்க இயலா தருணங்கள்.

உள்ளூரில் எட்டாம் வகுப்பு முடித்து, சங்கீதமங்கலம் உயர்நிலைப் பள்ளி சேர்ந்த முதல் தருணத்தில் தீண்டிய சரஸ்வதியின் கண்கள்

அக்கா திருமணமாகி சென்றபின், அக்கா வீட்டிற்கு சென்ற முதல் தருணத்தில், அந்த தெருவிலிருந்த ரதியின் கண்கள்

பத்தாம் வகுப்பு தேற முடியாமல், நகரிக்கு விசைத் தறி வேலைக்கு சென்ற முதல் தருணத்தில் சந்தித்த புவனாவின் கண்கள்

அங்கு சூழ்நிலை பிடிக்காமல், திருச்செங்கோட்டின் போர் வண்டி வேலைக்கு சென்றபோது, அந்த முதலாளியின் மகள் கண்மனியின் கண்கள்

போர் வண்டியில், மகாராஷ்ட்ராவின் நிவாஸ்பாட்டா ஊரில், மொழி தெரியாமல் பேசிக்கொண்ட விழிகளுக்கு சொந்தக்காரி, கரிஸ்மாவின் கண்கள்

மீண்டும் அண்ணன்,அக்கா, தம்பிகளை மறக்க முடியாமல், தேடிவந்து, படிக்க எண்ணி, தொலை தூரக்கல்வி வகுப்பில் சந்தித்த சஃப்ராபியின் கண்கள்

அது படித்துக்கொண்டிருக்கும்போது, ஊர் திரும்பிய மழை நேர மாலைப்பொழுதில், சந்தித்த ரீகா வின் கண்கள்

பெண் பார்க்கும் படலத்திற்கு முன்பான, எதேச்சையான ஒரு நிகழ்வில் சந்தித்த என் மனைவியின் கண்கள்

மும்பை அலுவலகத்தின் அருகில், உணவகம் வைத்திருந்த கரீனாவின் கண்கள்

முதல் வாடிக்கையாளர் சந்திப்பில், சாஃப்ட்வேர் டெமோ பார்க்க அமர்ந்திருந்த குழுவின் தலைவி கிஞ்ஞால் ச்சேடா வின் கண்கள்

இப்படி மறக்க இயலா தருணங்களை, மறக்க இயலாமல் நினைவுக்கு கொண்டு வந்த நேற்றைய, பயிற்சி பட்டறையில் சந்தித்த அந்த பெயர் தெரியா பெண்ணின் கண்களுக்கு நன்றிகள் உரித்தாகுக.


கருத்துகள் இல்லை: